அப்படி எழுதக்கூடிய ஒருவராக ரமேஷ் மஹாதேவன் இருந்தார். இன்றும் கூகிள் குரூப்ஸ் வழியாகத் தேடிப்பார்த்தால் அவர் எழுதியது உங்களுக்குக் கிடைக்கும். அவர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பாகவும் இணையத்தில் சில இடங்களில் கிடைக்கலாம். அஜய் பால்வாயண்டீஸ்வரன் என்று அவர் உருவாக்கிய பாத்திரம், பத்திரிகைகளில் மட்டும் கதைகளாக வந்திருந்தால், துப்பறியும் சாம்பு பாத்திரத்துக்கு இணையாகப் பிரபலமாகியிருக்கும். சென்னைக்கு திரும்பிய அவர், இப்போது SSN பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்கிறார்.
கர்நாடக இசை பற்றிய ஓர் அறிமுகப் புத்தகத்தை, A gentle introduction to Carnatic Music என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். எளிமையாக, ராகம், தாளம், மேற்கத்திய செவ்வியல் இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள வேறுபாடு என்று ஒன்றுமே தெரியாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில், எழுதப்பட்டுள்ளது. 100 பக்கத்துக்கு உள்ளாக இருக்கும் இந்தப் புத்தகம், Oxygen Books பதிப்பாக வெளியாகியுள்ளது. விலை ரூ. 100/-சென்னை இசைக் கச்சேரி சீசன் ஆரம்பமாகும் நிலையில் இதை வாங்கிப் படித்துப் பலரும் பயன்பெறுவர் என்று நம்புகிறேன்.
அடுத்து... இந்தப் புத்தகத்தை விரைவாகத் தமிழில் கொண்டுவர விரும்புகிறோம். கர்நாடக இசை தெரிந்த, நல்ல தமிழில் மொழிபெயர்க்கக்கூடியவராக இருந்தால் நல்லது. நீங்கள் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்க விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.













